10ம் வகுப்பு முடித்தவருக்கு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அஞ்சல் துறையில் அவ்வப்போது வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குக்கான அஞ்சல் துறையில் நேரடி முகவர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலை:
தமிழகத்தில் படித்த பட்டதாரிகள் முதல், 10ம் வகுப்பு முடித்தவர்கள் வரை உள்ளோருக்கு அஞ்சல் துறையில் அவ்வப்போது வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுடைய மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி?
அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்களை பணியமர்த்துவதற்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயது வரையுள்ள சுய தொழில் செய்பவர்கள், வேலை இல்லாதவர்கள், முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் உட்பட மற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வில் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே முகவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
TN Job “FB Group” Join Now
தேர்வு செய்யப்பட்டவரின் தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் தேர்வுக்கான நேர்காணலில் ஆகஸ்ட் 16 ம் தேதி காலை 10 மணிக்கு பங்குகொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு நடைபெறும் இடம் எண் 2 சிவஞானம் சாலை, தியாகராய நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம். தற்போது மக்கள் வேலை இல்லாமல் இருந்து வரும் நிலையில் அஞ்சல் துறையின் இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்.