புதிய நிதியாண்டில் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ஒரு ஆண்டில் 37,000 பேர் வெளியேற்றம் – இன்போசிஸ் தகவல்!

0
புதிய நிதியாண்டில் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ஒரு ஆண்டில் 37,000 பேர் வெளியேற்றம் - இன்போசிஸ் தகவல்!
புதிய நிதியாண்டில் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ஒரு ஆண்டில் 37,000 பேர் வெளியேற்றம் - இன்போசிஸ் தகவல்!
புதிய நிதியாண்டில் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு, ஒரு ஆண்டில் 37,000 பேர் வெளியேற்றம் – இன்போசிஸ் தகவல்!

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 37,000 ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 35,000 புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் வேளையில் டிஜிட்டல் மயமாக்கலின் அதிகரிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவற்றை ஈடு செய்யும் பொருட்டு இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் இன்போசிஸ் நிறுவனமும் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி பிரவின் ராவ் கூறுகையில், ‘டிஜிட்டல் திறமைக்கான தேவைகள் முன்னணி தொழில்நுட்ப துறைக்கு ஒரு சவாலாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி வருவாய் இழப்பு – நிதியமைச்சர் தகவல்!

அதனால் வரும் 2022 ஆம் நிதியாண்டுக்குள் கல்லூரி பட்டதாரிகளின் பணியமர்த்தல் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் நிறுவனம் அதன் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இந்நிறுவனத்தின் கடந்த ஜூன் காலாண்டில் மட்டும் குறைப்பு விகிதம் 13.9% ஆக இருந்தது எனவும் இவற்றை மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது 10.9% லிருந்து அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ஆண்டில் இன்போசிஸில் நிறுவனத்தில் இருந்து 37,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த ஊழியர்களின் குறைப்பு விகிதங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ள இன்போசிஸ் நிறுவனம், தொழில் முனைப்பு வாய்ப்புகள், இழப்பீடு மதிப்பீடுகள் மற்றும் கற்றல் & மேம்பாட்டு தலையீடுகள் போன்றவற்றில் ஊழியர்களின் ஈடுபாடு முயற்சிகளை எதிர்பார்த்துள்ளது. தவிர திறமைகளை தக்கவைப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் இந்நிறுவனம் சமகால நன்மைகள், தொழில் வளர்ச்சி, சிறந்த திறமை மேலாண்மை முறைகள், திறமைகள் மற்றும் 5 முதல் 10 வருடங்கள் அனுபவம் கொண்ட ஊழியர்களை தக்கவைத்தல் இப்போது மிகவும் முக்கியமானது என கருதுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே விப்ரோ நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டில் சுமார் 30,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் 2021-2022 நிதியாண்டில் ஊழியர்களின் குறைப்பு விகிதம் 15.5% ஆக கணக்கிடப்பட்டுள்ளது. TCS நிறுவனத்தை பொருத்தளவு, 40,000 க்கும் மேற்பட்ட புதியவர்களை நியமிக்க இருப்பதாக தெரிகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே 5 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 40,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதனிடையே 2021-22 ஆம் நிதியாண்டில் 8.6% குறைப்பு விகிதம் ஏற்பட்டதாக TCS அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!