தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி வருவாய் இழப்பு – நிதியமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தற்போதைய நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜன், அதிமுக அரசின் கீழ் நடைபெற்ற கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 4 லட்சம் கோடி வருவாய் இழப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
வருவாய் இழப்பு
கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில் திமுக கட்சியின் தலைமையின் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி புரிந்து வருகிறார். அந்த வகையில் முதல்வராக பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சட்டப்பேரவை கூட்டம் கடந்த வாரத்தில் துவங்கியது.
மாநில அரசின் விண்ணப்பத்துக்கு அதே மொழியில் பதில் அனுப்ப வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு !
அந்த கூட்டத்தில் தற்போது துவங்கியுள்ள 2021-22 ஆம் நிதியாண்டில் பல்வேறு புதிய திட்டங்களை அரசு மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கான நிதி தொடர்பான விவரங்களை பட்ஜெட் அறிக்கையாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தவிர தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் தமிழகத்தின் வருவாய் இழப்பு ரூ.4 லட்சம் கோடியாக இருந்ததாக அவர் தகவல் அளித்துள்ளார். அதாவது கடந்த 4 ஆண்டு கால அதிமுக தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் வழக்கமான வருமானம் ரூ.90,000 கோடி வரை குறைந்துள்ளது என கூறிய அவர் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.