ஒரே நாளில் வேலைவாய்ப்பற்ற 71,000 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் – பிரதமர் துவக்கம்!!
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த 71,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் வேலைக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்கியுள்ளார்.
பணி நியமன கடிதம்:
நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு நிறைந்து, அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்ற பாதையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் 1.5 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்தார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகம் – பள்ளிக்கல்வித்துறையில் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதற்காக முதல் கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 75,000 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடந்து வரும் ரோஜர் மேளாவில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கு காணொளி காட்சி மூலம் 2ம் கட்டமாக 71,056 பேருக்கு பணிக்கான நியமன கடிதத்தின் நகலை வழங்குகின்றார். இந்த நடைமுறையானது குஜராத் மற்றும் இமாச்சலில் சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டதால் அம்மாநிலங்களில் மட்டும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.