தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி இல்லை? பொதுமக்கள் அதிர்ச்சி!

1
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி இல்லை? பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி இல்லை? பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி இல்லை? பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் 5 பவுனுக்கு 100 மில்லி கிராம், 200 மில்லி கிராம் அளவுக்கு கூடுதலாக இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படாது. இது குறித்து பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றியும் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை கீழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி. தற்போது கடன் தள்ளுபடி செய்வது குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பலர் தள்ளுபடி பெறும் நோக்கில் 5 பவுனுக்கும் குறைவாக நூற்றுக்கணக்கில் கடன்களை வாங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 – அடுத்த மாதம் அறிவிப்பு!

இது போன்று திட்டமிட்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 5 பவுனுக்கு 100 மில்லி கிராம், 200 மில்லி கிராம் அளவுக்கு கூடுதலாக இருந்தாலும் தள்ளுபடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடைகளில் அரை பவுன், ஒரு பவுன் நகை வாங்கும்போது 100 மில்லி கிராம், 200 மில்லி கிராம் அளவுக்கு கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால், வாங்குபவா்களைப் பொருத்தவரை அரை பவுன், கால் பவுன் என்றே கணக்கில் வைத்திருப்பாா்கள். 5 பவுனுக்கு மேல் சில மில்லி கிராம் வரை கூடுதலாக இருந்தது என்பதற்காக தள்ளுபடி பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது.

TNPSC உதவியாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

எனவே கூடுதலாக ஒரு கிராம் வரை சலுகை அளித்து தகுதியான ஏழை, நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைத்திட முதல்வர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கூறியுள்ளார். மேலும் தகுதியான நபா்களைப் பரிந்துரைக்க கூட்டுறவு சங்க அளவில் சங்கச் செயலாளர், சங்கத் தலைவா், முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவை அமைக்கலாம் என விவசாய சங்கப் பிரதிநிதி தெரிவித்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. கூட்டுறவு பிரதம வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற அடிப்படையில் ஒருவரே பல வங்கிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்று உள்ளனர்.. அவர்களுக்கு தள்ளுபடி இல்லை என்றால் அது சரிதான் .உண்மையில் எழை எளிய மக்கள் பெரும்பாலும் ஒரு பவுன் இரண்டு பவுன் தனியாரிடம் தான் அடகு வைத்து தங்களின் அவசர தேவைக்கு பயன் படுத்துகிறார்கள்…திட்டமிட்டு தள்ளுபடி கிடைக்கும் என்ற அடிப்படையில் போலியாக நகைகள் வைக்காமலும் கவரிங் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களை கண்டு பிடித்து தகுதி அடிப்படையில் தள்ளுபடி அறிவிக்கும் அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!