ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக மாணவர் சாதனை!!
நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக மாணவர் உள்ளிட்ட 13 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஜேஇஇ முதன்மை தேர்வுகள்:
மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்வுகள் 4 முறை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மார்ச் மாதத்திற்கான தேர்வுகள் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநில மொழிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆண்டு தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
நாடு முழுவதும் உள்ள 334 நகரங்களில் 792 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த தேர்வுகள் முதன்முறையாக கார்கில் பகுதியிலும் கோலாலம்பூர், மலேசியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளிலும் நடைபெற்றது. இந்நிலையில் மார்ச் மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
PF வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு – ஏப்ரல் 1 முதல் அமல்!!
அதல் தமிழக மாணவர் அஸ்வின் ஆபிரஹாம் உள்ளிட்ட 13 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் அடுத்தகட்டமாக ஏப்ரல் மாதம் மீண்டும் நான்காவது முறையாக இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஒரே மாணவர் நான்கு முறையும் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – அரசாணை வெளியீடு!!
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியல்:
- டெல்லி – சித்தார்த் கல்ரா மற்றும் காவ்யா சோப்ரா
- தெலங்கானா – பன்னூரு ரோஹித் குமார் ரெட்டி, மதுர் ஆதர்ஷ் ரெட்டி, ஜோஸ்யுலா வெங்கட்ட ஆதித்யா
- மேற்கு வங்கம் – பிராடின் மொண்டல்
- பிஹார் – குமார் சத்யதர்ஷி
- ராஜஸ்தான் – மிருதுல் அகர்வால், ஜெனித் மல்ஹோத்ரா
- தமிழ்நாடு – அஸ்வின் ஆபிரஹாம்
- மகாராஷ்டிரா – பக்ஷி கார்கி மகரந்த், அதர்வா அபிஜித் தம்பத்