7 ரயில்வே ஸ்டேஷன்களுக்கு புதிதாக ஐ.எஸ்.ஓ தரச்சான்று!!!
தென்னக ரயில்வே துறையை சேர்ந்த தமிழகத்தில் உள்ள 7 ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அவற்றின் சேவையை பாராட்டி புதிதாக ஐ.எஸ்.ஓ தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரயில்வே துறை:
இந்தியா நாட்டிலேயே ரயில்வே துறைதான் மிகவும் பெரிய பொதுப்பணி துறையாகும். லட்சக் கணக்கானவர்கள் ரயில்வே துறையில் பணியாற்றிவருகின்றனர். மத்திய அரசு ரயில்வே துறையில் அடிக்கடி பல புதிய மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டம், ஆளில்லா ரயில் வண்டி என்று பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட பணிகள் குழுவில் தன்னார்வலர்கள் – ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஐ.எஸ்.ஓ தரசான்றிதழ்:
பொதுவாக ஒரு ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள ரயில்களின் இயக்கம், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு, ரயில்வே ஸ்டேஷன் சுத்தம், சுகாதாரம் பேணுதல், பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கும் முறை, ஸ்டேஷனில் உள்ள மேம்படுத்தப்பட்ட வசதிகள், பார்சல்களை கையாளுதல், விரைந்து அனுப்புதல் ஆகிய விஷயங்களில் சிறப்பாக செயல்படும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
தென்னிந்திய ரயில்வே:
தென்னிந்தியாவை சேர்ந்த 7 ரயில்வே ஸ்டேஷன்களுக்கு புதிதாக ஐ.எஸ்.ஓ தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல், ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் ஐ.எஸ்.ஓ தரசான்றிதழ் பெற்றுள்ளதாக ரயில்வே கோட்ட அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்