சட்ட பணிகள் குழுவில் தன்னார்வலர்கள் – ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்ய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி தனசேகரன் அறிவித்துள்ளார்.
சட்டப்பணிகள்:
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை
தகுதியானவர்கள்:
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர்கள் பணிக்கு ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்எஸ்டபிள்யூ மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு கணினியில் அடிப்படை பயிற்சிகள் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/tn/namakkal என்ற நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 8ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணி தற்காலிகமானது ஆகும், இதற்காக தகுந்த மதிப்பூதியும் மட்டுமே வழங்கப்படும்.
Download Notification 2021
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்