தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை – புதிய திட்டம் அறிமுகம்!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இயற்கை பணி
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நலத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டங்கள் மூலமாக மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி கொள்ள வாய்ப்புகளும் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் புதிய திட்டம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
கல்வி நிலையங்களில் ‘இவை’ கட்டாயம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அதாவது, அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் ‘இயற்கை பணி’ என்ற திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு செயல்பாடுகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் மாநிலத்தில் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.