IND vs SA 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன? ரிஷப் பண்ட் பேட்டி!
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நேற்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ரிஷப் பண்ட் இந்திய அணி தோல்வி குறித்து பேட்டியளித்துள்ளார்.
ரிஷப் பண்ட் பேட்டி:
கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என தென்னாபிரிக்க அணி முன்னிலை வகித்த நிலையில் நேற்று பார்ல் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2 வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை நழுவ விட்டது.
தமிழகத்தில் ஜன.23ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
நேற்று நடைபெற்ற 2 வது போட்டியில் டாஸ் வென்ற வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரர்களாக KL ராகுல், ஷிக்கர் தவான் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் எடுத்தனர். 11 ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்த தவான் மார்க்கம் பந்தில் அவுட் ஆனார். பின்பு களம் இறங்கிய முன்னாள் கேப்டன் கோஹ்லி டக் அவுட் ஆனார். தென்னாபிரிக்கா அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து.
ஜன.29 வரை 17 நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கியது தென்னாபிரிக்கா அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மலான், டி கோக், பாவுமா, மார்க்ரம் ஆகியோர் சிறப்பாக விளையாடி 288 ரன்களை செய்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி தோல்வி குறித்து ரிஷப் பண்ட் பேட்டியளித்துள்ளார். அதில் மிடில் ஆர்டரில் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாடியது என்றும் தென்னாபிரிக்கா அணி சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த தோல்வியை பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்