Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதம், மாதாந்திர வருமானம் & முழு விபரங்கள் இதோ!
அஞ்சலகங்கள் மக்களுக்கு உதவும் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறைந்த அளவிலான தொகையை கொண்டு சேமிக்கும் திட்டங்களாக உள்ளது. அந்த வகையில் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டங்கள்:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் என்னவெனில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்களில் சேருபவர்களுக்கு சேமித்த தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேர ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. பங்கு சந்தை மற்றும் பிற தொழில்களில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு லாபத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும் என்பது சந்தேகமே. பாதுகாப்பான ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் கை கொடுக்கும்.
இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் மக்கள்!
செல்வ மகள் சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் மாதாந்திர வருமான திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரையும் சேமிக்கலாம். இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதம் அளிக்கப்படுகிறது. மேலும் இதில் கிடைக்கும் வட்டிகளுக்கு வரி உண்டு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் நீங்கள் சேர்ந்த தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு தான் வட்டி வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுத்தாலும், எடுக்கா விட்டாலும் வட்டி தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. இந்த சேமிப்பு திட்டம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. மாதாந்திர சேமிப்புக்கு செலுத்த வேண்டிய தொகை குறைந்த அளவாக உள்ளதால் பெரும்பாலும் மக்கள் இந்த திட்டத்தில் சேர முன்வருகின்றனர்.