கேரள மாநிலத்தின் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் – நிபா வைரஸ் எதிரொலி!
கேரளா மாநிலத்தில் தற்போது புதிதாக நிபா வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கிருந்து வரும் பயணிகள் மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் பாதிப்பு குறைந்து விட்டது. பாதிப்பு குறைந்து வருவதால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக பட்சமாக கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி 30,000 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,544 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக மத்திய சுகாதார குழுவினர் கேரளா சென்றுள்ளனர். தற்போது மேலும், புதிய பிரச்சனையாக கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் என்ற புதிய வகை பாதிப்பினால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இதனால் அங்கு மேலும், நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வர வாய்ப்புள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு வரும் பயணிகளை கன்னியாகுமரி, செங்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் அனைவருக்கும் அறிகுறி ஏதும் உள்ளதா என்றும், பரிசோதனை மேற்கொண்ட பின்னரும் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.