மே 29 முதல் ஜூன் 7 வரை தீவிர முழு ஊரடங்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
மைசூர் மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் மே மாதம் 29 முதல் ஜூன் 7 வரை மாவட்டம் முழுவதும் கடுமையான ஊரடங்கு நடைமுறைகளை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் விகிதம் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. அம்மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 நாட்களாக தினசரி 2000 வரை கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர கொரோனாவால் இதுவரை மாவட்டம் முழுவதும் 39.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மைசூர் மாவட்டத்தில் மே 29 முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நிர்வாகம் முடிவு செய்தது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக டி.சி ரோஹினி சிந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மைசூர் மாவட்டத்தில் நேற்று ஒரு வரை 1,34,448 கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,16,299 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,538 இறப்புகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் 16,548 பேர் சிகிச்சையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இதனால் அம்மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளின் படி, மருத்துவ சேவைகள், பால், காய்கறி மற்றும் பழ கடைகள் மற்றும் நியாய விலைக்கடைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டிருக்கும்.
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு உத்தரவு!!
மேலும் வாரத்தில் திங்கள் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 முதல் மதியம் வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் சோமசேகர், அரசு விதித்துள்ள இந்த ஊரடங்கு நடைமுறையை மக்கள் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த 2 தினங்களில், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.