புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு? வெளியான தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் 31% அகவிலைப்படி (DA) உயர்வுடன் சேர்த்து, வரவிருக்கும் புதிய ஆண்டில் மீண்டுமாக அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 31% மாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட சில சலுகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி (DA) உயர்வு கடந்த தீபாவளி பண்டிகை பரிசாக அறிவிக்கப்பட்டு லட்ச கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதை தொடர்ந்து வரும் புதிய ஆண்டிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அறிவுறுத்தல்!
அதாவது 7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) மீண்டும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முறை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் DA உயர்வு மற்றும் சம்பள உயர்வு ரூ.20,000 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விவரங்கள் அறிக்கைகளின் அடிப்படையில் வெளியானது என்பதும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA)தொகை அதிகரிக்கப்படுவது வழக்கமானதாகும். இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு கிட்டத்தட்ட 3 தவணைகளாக முடக்கப்பட்டு தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4.7 மில்லியனுக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 6.86 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.