கொரோனா போல பரவும் இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் – எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்!
நாடு முழுவதும் தற்போது பருவக் கால நோய் அதிகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம் எச்3என்2 வைரஸ் என ஐசிஏஆர் தெரிவித்துள்ள நிலையில் இது கொரோனா போல வேகமாக பரவக் கூடியது என முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தான் குறைந்து வரும் நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக, இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் அதிகமாக பரவி வருகிறது என ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு கடுமையான காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். தற்போது தினமும் பலர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்படுகின்றனர்.
அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 9ம் தேதி அன்று விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!
இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன் படி இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் எச்1என்1 வைரசின் மாறுபாடு அடைந்த வைரஸ் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸ் கொரோனா போல வேகமாக பரவக் கூடியது எனவும், இதனால் முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.