இந்திய – வங்காளதேச எல்லை தடை ஜூலை 14 வரை நீட்டிப்பு!
இந்தியாவில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக இந்தியாவுடனான எல்லையை அண்டை நாடான வங்காளதேசம் மூடியது. இதற்கான தடைகளை தற்போது ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
எல்லை மூடல்
கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவில் பேரலையாக உருவான கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியா கொரோனா 2 ஆம் அலையால் பாதிக்கப்பட்டு வந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தவிர தினசரி 4 ஆயிரம் வரை பலி எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வந்தது.இந்தியா எதிர்கொண்டு வந்த மோசமான பாதிப்புகளை கவனத்தில் கொண்ட உலக நாடுகள் இந்தியாவுடனான பயணிகள் தொடர்பை ரத்து செய்தது.
WhatsApp Business பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – Online நிலை நீக்கம்!
அதாவது இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளின் வருகைக்கு தடை விதித்து, விமான சேவைகளையும் நிறுத்தி வைத்தது. இதற்கிடையில் இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் இந்திய எல்லையை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடியது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும். இந்திய – வங்கதேச எல்லையை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி வரை இந்திய – வங்கதேச எல்லை மூடப்பட்டிருக்கும், என்றாலும் சரக்கு மற்றும் பொருட்களின் சேவைகளுக்காக மட்டும் போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்படும் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.