சென்னை – வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை தொடக்கம் – மார்ச் 26 முதல்! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
பொதுவாக சென்னையிலிருந்து கோடைகாலத்தை முன்னிட்டு வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும். அந்த வகையில் மார்ச் 26 முதல் வளைகுடா நாடுகளுக்கு கோடை கால விமான சேவை தொடங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவை
பொதுவாக கோடை காலத்தை முன்னிட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் விமான சேவைகள் கூடுதலாக இயக்கப்படும். இதில் குறிப்பாக விமான நிறுவனங்கள் வளைகுடா நாடுகளுக்கு விமான சேவையை தொடங்குவதாக அறிவிப்பை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டில் கோடை காலம் தொடங்க இருப்பதால் இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
சென்னை – வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கோடை கால விமான சேவைகளை தொடங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளான மஸ்கட், அபுதாபி நாடுகளுக்கு தினசரி விமான சேவை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு – விவசாயிகளுக்கு ஆட்சியர்களுக்கு அழைப்பு!!
இதே போல ஹைதராபாத் – அபுதாபி இடையேயும் கோடை காலத்தை தினசரி விமான சேவையை தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கோடை கால விமான சேவையானது வருகிற மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.