Tokyo Olympics Hockey : அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி போராடி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, அர்ஜென்டினா அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதிய நிலையில், கடைசி வரை போராடிய இந்திய அணி இறுதியில் தோல்வியை தழுவியது. இதனால் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்
இன்று நடைபெற்ற போட்டிகளில் குத்துசண்டை போட்டியில் லோவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ) 0-5 என்ற கணக்கில் உலக சாம்பியனான புசெனாஸ் சுர்மெனெலிக்கு எதிராக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அசாமை சேர்ந்த 23 வயதான இவர், விஜேந்தர் சிங் (2008) மற்றும் எம் சி மேரி கோம் (2012) ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மூன்றாவது பாக்ஸர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 9 முதல் இன்ஜினியரிங் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா 86.55 மீட்டர் தூரம் எறிந்து ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7 -ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மல்யுத்த வீரர் ரவிக்குமார் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தீபக் புனியா அந்தந்த எடை பிரிவுகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் ராக்கி ராம்பால் தலைமையிலான ஹாக்கி அணி, அர்ஜன்டினா அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது. அர்ஜென்டினா 2000 முதல் 2012 வரை நான்கு போட்டிகளில் அரையிறுதிக்குள் நுழைந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால் போட்டி விறுவிறுப்படைந்தது.
TN Job “FB Group” Join Now
அடுத்ததாக மூன்று முறை அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. இறுதியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் அடுத்த கட்டமாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.