புது பொலிவு பெறும் 90 ரயில் நிலையங்கள் – அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்! முழு விவரம் இதோ!
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
ரயில் நிலையம்:
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது அம்ரித் பாரத் ஸ்டேஷன் எனும் திட்டத்தின் கீழ் தமிழகம் சில மாநிலங்களில் ரயில் நிலையங்களில் கழிவறை, உணவகம், மின்படிக்கட்டு, டிக்கெட் கவுண்டர், இணையவசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான வழக்கு இன்று விசாரணை – இறுதி தீர்ப்பு எப்போது?
இதன் கீழ் தமிழகத்தில் மட்டும் 61 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது. அதே போல கேரளாவில் – 26, ஆந்திராவில் – 1 என மொத்தம் 90 ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளது. இதற்கான டெண்டரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரசின் இத்தகைய திட்டத்தால் ரயில் நிலைங்கள் பொலிவு பெறும்.