இந்திய அஞ்சல் துறையின் “செல்வமகள் சேமிப்பு திட்டம்” – முழு விவரம் இதோ!
பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்கவே, இந்திய அஞ்சல் துறையின் “செல்வமகள் சேமிப்பு திட்டம்” அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்:
இந்திய அஞ்சல் துறையில் பல சேமிப்பு திட்டங்கள் இருக்கும் நிலையில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘சுகன்யா சம்ரிதி’ எனப்படும் ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தாலும், இரு குழந்தைகள் இருந்தாலும் தனி தனியாக கணக்கு தொடங்கலாம்.
தமிழகத்தில் செப்.11 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தை தொடங்க வைப்புத் தொகையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு ஆதாரம் தொடர்பான பிற ஆவணங்கள் தேவை. மேலும் பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கணக்கு திறக்கும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பு சான்றிதழ் இல்லாமல் இருந்தால் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக கொடுக்கலாம். இந்த திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும் போது செலுத்திய தொகையை விட மூன்று மடங்கு பணம் கிடைப்பதால் இது ஒரு நல்ல திட்டமாக இருக்கிறது.