இந்திய கடற்படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
இந்திய கடற்படையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடம் நிரப்புவது குறித்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் 10+2 (B. Tech) Cadet Entry Scheme-ன் கீழ் Education Branch மற்றும் Executive & Technical Branch-களுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கு படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு திருமணமாக ஆண்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகியுள்ள இந்திய கடற்படை வேலைவாய்ப்பு அறிவிப்பில் 10+2 (B. Tech) Cadet Entry Scheme பதவிக்கு என மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
- Education Branch – 05 பணியிடங்கள்
- Executive & Technical Branch – 30 பணியிடங்கள்
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Physics, Chemistry மற்றும் Mathematics பாடப்பிரிவில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் (10+2 Pattern) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.E / B.Tech முடித்து JEE (Main) – 2021 தேர்வில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சிறந்த coaching centre – Join Now
- 02.01.2003 அன்றைய நாள் முதல் 01.07.2005 அன்றைய நாள் வரை, பிறந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். (2 நாட்களும் உட்பட)
- மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு ஊதிய விதிமுறைகளின் படி பதவிக்கு ஏற்ற ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் பார்வையிடவும்
- இப்பணிக்கு Service Selection Board (SSB) ஆனது JEE (Main) All India Common Rank List (CRL) – 2021 ன் அடிப்படையில் Shortlisting செய்யப்படுவார்கள். அதன் பின், Interview மற்றும் Medical தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Indian Navy விண்ணப்பிக்கும் முறை:
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த ஆண்கள் கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து 08.02.2022 அன்றைய நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் (08.02.2022) நாளையுடன் முடிவதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.