வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை – வெளியுறவுத்துறை விளக்கம்!!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் வெளிநாடுகளுக்கு சென்று உயர்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
மாணவர்களின் விவரங்கள்:
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான உயர்கல்வி பெற்று கை நிறைய சம்பளம் வாங்கி வாழ்க்கையைத் தொடங்கும் கனவில் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, ஐக்கிய அரேபிய அமீரகம் ஆகிய நாடுகளில் மட்டுமே 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்களாக இந்திய மாணவர்களே இருக்கிறார்கள்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சென்று பயிலும் கனவோடு இருக்கும் இந்திய மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டது. இது குறித்து லோக் சபாவில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் கூறுகையில், “2016ம் ஆண்டில், 3 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரும், 2017ம் ஆண்டில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 823 பேரும், 2018ம் ஆண்டில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 342 பேரும் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றனர்.
சட்ட படிப்புகளுக்கான CLAT நுழைவுத் தேர்வு – ஏப்ரல் 30 கடைசி நாள்!!
ஆனால் கொரோனா காரணமாக அவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. 2019ம் ஆண்டில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 931 இந்திய மாணவர்கள், கல்வி கற்க வெளிநாடுகளுக்கு சென்ற நிலையில், 2020ம் ஆண்டில், 2 லட்சத்து 61 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே சென்றுள்ளனர். இதுவரை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நேரத்தில் தற்போது கொரோனா காரணமாக மேலும் குறைந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.