நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுதப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் கடுமையாக பின்பற்றப்பட்ட பொதுமுடக்கம் நாளடைவில் வழங்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் காரணமாக இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனை!!
உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை 11,679,958 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், நோய்த்தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா பாதிப்பு 2வது அலை தொடர்பாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துதல், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
Super