தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனை!!
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால், ஓட்டு எண்ணிக்கை நாளைக்கு மறுதினம் (மே 3) நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வித்துறை ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அடுத்த உத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மே 2 இல் வாக்கு எண்ணிக்கை, மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனால் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை அரசு ஏற்கவில்லை. தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை – வெளியான தகவல்!!
இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ், இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இதில் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் முடிந்த பின் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.