இந்தியர்களுக்கு அனுமதி அளித்த ஜெர்மன் அரசு – நாளை முதல் விமான சேவை!
ஜெர்மனி அரசு கொரோனா பரவல் காரணமாக இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் விமான சேவை நாளை முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான சேவை தொடக்கம்:
உலகளவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விமான சேவை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைப்பு – எல்.ஐ.சி பைனான்ஸ் திட்டம்!
இது குறித்து ஜெர்மனியில் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பான தி ராப்ர்ட் கோச் நிறுவனம் கூறுகையில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால் அந்த நாட்டை சேர்ந்தவர்களும், அந்த நாட்டில் இருந்து ஜெர்மனியை சேர்ந்தவர்களும் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி!
மேலும் ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்களும் தடை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெர்மன் நாட்டிற்கு வர அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பயணம் செய்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றிருக்க வேண்டும். இதே போல கடந்த வாரம் துபாய் அரசு இந்தியர்களுக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.