நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – பிரதமர் மோடி ஆலோசனை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து நாட்டின் மிக சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தற்போது பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது. ஆனால் அது பலனளிக்காமல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
TN Job “FB Group” Join Now
மாநில அரசுகளும் பல துரித நடவடிக்கைகளை செய்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
நெல்லை டூ சென்னை செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!
தற்போது மீண்டும் நாட்டின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் 4.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னர் சிறந்த மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் மோடி மாலை 6 மணிக்கு காணொளி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.