இந்தியாவில் மருத்துவ அவசரநிலை உத்தரவுக்கு தடை – உயர்நீதிமன்றம் விளக்கம்!!
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை என மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மருத்துவ அவசரநிலை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவிர தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர நாடானது மருத்துவம் மற்றும் ஆக்சிஜன் போன்ற அடிப்படை தேவைகளில் பின்தங்கி காணப்படுகிறது. இந்நிலையில் நம் நாடு தற்போது எதிர்கொண்டு வரும் இந்த வைரஸ் தாக்கத்தில், இந்தியாவுக்கு உதவியாக பல உலக நாடுகள் கை கொடுத்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் மருத்துவ அவசரநிலை பிரகடனம் உத்தரவை வழங்க உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
சென்னை டூ சேலம் பயணிகள் விமான போக்குவரத்து ரத்து – விமான நிலைய இயக்குனர்!!
அதாவது நாடு முழுவதும் ஆக்சிஜன், மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும், இந்தியாவில் மருத்துவ அவசரநிலையை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதால் மருத்துவ அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்க உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்