இந்தியாவில் 3வது அலை தொடக்கம்? ஒரே நாளில் 25,404 பேருக்கு கொரோனா – 339 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 339 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 25,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,89,579 ஆக அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தொற்று முழுமையாக குறையவில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பொது இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
இவ்வாறு தொடர்ந்து தடுப்பு பணிகளை அரசு செய்த போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 339 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,43,213 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது.
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி 5570 வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!
இதுவரை நாட்டில் 75,22,38,324 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37,127 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,24,84,159 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,62,207 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.