சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து உள்ளது. இவ்வாறு தினசரி ஏற்ற, இறக்கத்துடன் விலை நிலவரம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர். இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,435 ஆக உள்ளது.
தங்க விலை நிலவரம்:
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளிட்ட அனைத்தும் சரிவை கண்டது. எனவே முதலீட்டாளர்கள் கவனம் முழுவதும் தங்கத்தின் மீது திரும்பியது. தங்கத்தின் மீது முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்றாக இருப்பதால் அதற்கு இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். விளைவு, ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு காலத்தில் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்த திட்டமிட்டவர்களும் ஆடிப்போயினர்.
தமிழக முதல்வர் அறிவிப்பின்படி 5570 வழக்குகள் வாபஸ் – அரசாணை வெளியீடு!
பின்னர் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பொருளாதாரம் முன்னேற்ற பாதைக்கு திரும்பியது. எனவே தங்கத்தின் விலையும் ஓரளவு கட்டுக்குள் வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த தங்க விலை நிலவரம் இன்றைய காலை நிலவரப்படி மீண்டும் அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,435 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ரூ.8 உயர்ந்து ரூ.35,480 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? இன்று முக்கிய ஆலோசனை!
மறுபுறம் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.67.40 ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுளள்து. இவ்வாறு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று கவலை அடைந்து உள்ளனர்.