இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,27,510 பேருக்கு தொற்று!!
இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் குறைவாக 1,27,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த ஆண்டு, முதல் அலை இந்த ஆண்டு இரண்டாம் அலை என்று மக்களை சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக கொரோனா தொற்று பாதித்து வருகிறது. சுமார் மூன்று மாத காலமாக வீரியம் செலுத்தி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,81,75,044 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 2,795 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,31,895 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,55,287 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,59,47,629 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் 18,95,520 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 19,25,374 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 21,60,46,638 ஆக உயர்ந்துள்ளது.