இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர இருக்கிறது. இந்த புத்தாண்டில் எவ்வளவு டிஏ உயர்வு இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இருந்து 6 மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும். தற்போது வெளியான அறிவிப்பின் படி ஆறு மாதங்களுக்கு DA 4 சதவீதம் அதிகரிக்கப்படும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அவ்வாறு மார்ச் மாதம் 4 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50% எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டிஏவை 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.