தமிழக காவல் துறையினருக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் – ஊக்கத்தொகை வழங்க முடிவு!
தமிழகத்தில் காவலர்களுக்கு விடுமுறை மற்றும் இரவு பணி செய்தால் சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிறப்பு சலுகைகள்:
சமீப காலமாக காவல்துறை ஊழியர்கள் கூடுதல் பணிசுமை, உயர் அதிகாரிகள் தொல்லை, பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், காவலர்கள் விதி மீறி செயல்படுவதாகவும் பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். இதனால், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறையினர் பணி நேரத்தில் மிகவும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் செயல்பட உத்தரவிட்டுள்ளார்.
ஜன.7 முதல் சாதி வாரி கணக்கெடுப்பின் முதற்கட்டம் தொடக்கம் – பீஹார் முதல்வர் உறுதி!!
Follow our Instagram for more Latest Updates
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், ஓய்வில்லாமல் உழைக்கும் காவல் துறையினருக்கு ஓய்வளிக்கவும் கோரிக்கைகள் எழுந்தது. அதன்படி, நடப்பு ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் இனி 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும் என்றும், இரவில் ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.