தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.26) ‘இந்த’ இடங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.26) 'இந்த' இடங்களில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.26) 'இந்த' இடங்களில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.26) ‘இந்த’ இடங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் திருச்செந்தூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், உடன்குடி பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

இந்தியாவில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடைபெறாது. அதாவது வீடு முதல் பள்ளி, கல்லூரி, வேலைபார்க்கும் நிறுவனங்கள் என கணக்கிலடங்காத துறைகளுக்கு மின்சாரம் இன்றியமையாத தேவையாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானதாக மின்சாரம் உள்ளது. அதாவது மின் இணைப்பு மூலம் நீரானது விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தியாவில் அனைத்து துறைகளுக்கும் மின்சாரம் முக்கியமான காரணியாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி குறைந்து காணப்படுவதால் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இதனை சரிப்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதை தவிர மக்களும் மின்சாரத்தின் தேவைகளை அறிந்து அதனை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை தவிர மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்களை பராமரித்து சீரான மின்சாரம் வழங்குகிறது.

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு – தமிழக எழுத்தாளர்கள் தேர்வு!

Exams Daily Mobile App Download

அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது பணியில் ஈடுபடும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் மாவட்டம் கல்லாமொழி உப துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!