தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு – அரசிற்கு ஊழியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, சக்கரை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கடந்த ஆட்சியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் தொகுப்பு மட்டுமல்லாமல் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் பொங்கல் பரிசு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 புதிய பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
இந்நிலையில் ரேஷன் ஊழியர்கள் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பணிச்சுமை இல்லாதவாறு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று காரணமாக 14 வகை மளிகை பொருட்கள் அரசால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்ட்டது. அந்த தொகுப்பில் துணிப்பையும் இடம்பெற்றிருந்தது. ஆனால் துணிப்பையில் வழங்கப்படாமல் பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக வழங்கப்பட்டது. அதனை ரேஷன் ஊழியர்கள் ஒன்று சேர்த்து வழங்கும் நிலை ஏற்பட்டதால் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நாளை ஆய்வு – மத்தியகுழு இன்று வருகை!
மேலும் சில பொருட்கள் எண்ணிக்கையில் குறைந்து வந்திருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த நிலை பொங்கல் தொகுப்பு வழங்குதலில் நிகழாத வண்ணம் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து துணிப்பையில் தைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வழக்கமாக வரும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் சரியான அளவில் வருவதில்லை, அதனையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.