முக்கியமான நிகழ்வுகள் மே-13
பக்ருதின் அலி அகமது பிறந்த தினம்
பிறப்பு:
- 13 மே 1905ல் பிறந்தார்.
சிறப்பு:
- இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1974 முதல் 1977ல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.
- கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1928ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்தார்.
- 1925ம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் தீவிரமாக பணியாற்றினார்.
- 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக மூன்றரை (3 1/2) ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
- சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் 1952 முதல் 1953 ராஜ்ய சபாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் அசாம் அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார்.
- 1936 முதல் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகவும்,1947 முதல் 1974 வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
- இவர் கோபிநாத் போர்டோலாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,வருவாய் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
- நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார்.
- 1967ம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்துசங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட்டங்கள்:
- 1975ம் ஆண்டு யுகோஸ்லாவியா சென்ற போது அங்குள்ள கொசோவோ நகரின் பிரிஸ்டினியா பல்கலைகழகத்தினர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.
இறப்பு:
- 11 பிப்ரவரி 1977ல் இறந்தார்.
தாராபாரதி நினைவு தினம்
பிறப்பு:
- 26 பிப்ரவரி 1947ல் பிறந்தார்.
இயற்பெயர்: ராதாகிருஷ்ணன்
ஊர்: குவளை -திருவண்ணாமலை மாவட்டம்
பெற்றோர்: துரைசாமி-புஷ்பம் அம்மாள்.
சிறப்பு :
- தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.
- 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
- கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
- தமிழ்நாடு அரசு 2010 – 2011ல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
நூல்கள்:
- புதிய விடியல்கள்
- இது எங்கள் கிழக்கு
- திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
- விரல்நுனி வெளிச்சங்கள்
- பூமியைத் திறக்கும் பொன்சாவி
- இன்னொரு சிகரம்
- கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்
இறப்பு:
- 13 மே 2000ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்