முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-21
ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்
பிறப்பு:
- மே 25, 1886ல் பிறந்தார்.
சிறப்பு:
- பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த இந்தியர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்கு உதவும் பொருட்டு தொடங்கிய கதர் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர்.
- இந்திய தேசியப் படையை நிறுவியவர். ஆசாத் இந்து அரசு அமைத்து போர்ப் படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாவார்.
- மலாயா மற்றும் தாய்லாந்தில் இருந்த இந்திய பொதுமக்களின் பிரதிநிதிகளும், இந்தியப் படை அதிகாரிகளும் ஜப்பானியத் தலைமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக டோக்கியோவில் ஒரு மாநாடு நடத்தினர்.1942 மார்ச் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை இம்மாநாடு நடந்தது.
- அதன் தொடர்ச்சியாக ‘இந்திய சுதந்திர லீக்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
- 1942, ஜூன் 22 ல் பாங்காக்கில் இரண்டாவது மாநாட்டை ராஷ் கூட்டினார்.
- மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஜாவா, போர்னியோ, மணிலா, தாய்லாந்து, ஹாங்காங், ஷாங்காய், மஞ்சூரியா மற்றும் பிரெஞ்ச் இந்தோசீனாவிலிருந்து மொத்தம் 150க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். ராஷ் பிகாரிபோஸ் தலைமை வகித்தார்.
- இந்திய தேசிய ராணுவத்தை (INA) மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942, செப்டம்பர் 1-ல் அமைத்தார் ராஷ். இதுவே முதல் இந்திய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய ராணுவம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. படைப் பிரிவுகளுக்கு காந்தி, நேரு ஆசாத் பெயர்கள் சூட்டப்பட்டன.
விருது:
- ஜப்பான் அரசு ராஷ் பிகாரி போஸின் வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பின் ‘ORDER OF RISING SUN ‘ என்ற உயர் விருதை வழங்கிச் சிறப்பித்தது.
இறப்பு:
- ஜனவரி 21, 1945ல் இறந்தார்.
விளாடிமிர் லெனின் நினைவு தினம்
பிறப்பு:
- ஏப்ரல் 22,1870ல் பிறந்தார்.
இயற்பெயர்: விளாடிமிர் உலியனொவ்
சிறப்பு:
- லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர்.
- ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார்.
- சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் சோவியத் மார்க்சியம் – லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார்.
- “லெனின்” என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று.
- தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார்.
- 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல் ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
இறப்பு:
ஜனவரி 21, 1924ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்