பாரதிதாசன் பிறந்த தினம்
பிறப்பு:
- ஏப்ரல் 29, 1891 ல் பிறந்தார்.
இயற்பெயர்: சுப்புரத்தினம்.
சிறப்பு:
- சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
- அவர் 20ம் நூற்றாண்டு தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர் பகுத்தறிவாளராக இருந்தார்.அவரின் இலக்கிய படைப்புக்கள் பெரும்பாலும் சமூக-அரசியல் பிரச்சினைகளை கையாண்டன.
- பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்படுபவர்.
- புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:
- “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”
- புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம். - தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.
- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பாரதிதாசன் நூல்களில் சில:
- அகத்தியன்விட்ட புதுக்கரடி
- சத்திமுத்தப்புலவர்
- இன்பக்கடல்
- இலக்கியக் கோலங்கள்
- உலகம் உன் உயிர்
- ஏழைகள் சிரிக்கிறார்கள்
- கற்கண்டு
விருது:
- கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
- இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
- 1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இறப்பு:
- பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
சர்வதேச நடன தினம்
- சர்வதேச நடன தினம் நடனத்தின் உலகளாவிய கொண்டாட்டமாகும்.இது சர்வதேச தியேட்டர் இன்ஸ்டிடியூட் (ITI) நடனக் குழுவால் உருவாக்கப்பட்டது.இது யுனெஸ்கோவின் கலைகளுக்கான முக்கிய பங்காளியாகும்.
- நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது.
- இது நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.
2018 கருப்பொருள்:
- 2018ம் ஆண்டில் சர்வதேச நடன நாளுக்கான கருப்பொருள் -“நடனம் உங்கள் உடலின் ஆன்மாவின் மறைக்கப்பட்ட மொழியாகும்”.
இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம்
- இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது.
- சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர்.
- இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997ல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Super