தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – கமிஷனர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை இடி, மின்னல் போன்ற பேரிடர்களில் இருந்து பாதுகாப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கமிஷனர் சுற்றறிக்கை:
இந்தியாவில் இடி, மின்னல் போன்ற பேரிடர்களில் இருந்து பள்ளி கட்டிடங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உயரம் அதிகமுள்ள அல்லது தனியாக உள்ள பள்ளி கட்டடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மின்னல் மற்றும் இடி தாங்கியின் தேவை உள்ளதா என்பதை பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மத்திய அரசு சார்பில் கைம்பெண்களுக்கான நிதியுதவி திட்டம் – தேவைப்படும் ஆவணங்கள்!
மேலும் பள்ளி கட்டிடங்கள் கட்டும் போது மின்னல் மற்றும் இடி தாங்கி அமைத்திடும் அதிகாரிகளுக்கிடையே கட்டிட வடிவமைப்புகளின் போது தொடர்பு வைத்திருத்தல் வேண்டும். மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது அதிகமான நபர்கள் கூடும் இடங்களில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி வேலை நேரங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
பள்ளிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை காலங்களில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்காத வகையில் உறுதியான கான்கிரீட் கூரை அமைக்கப்பட்ட இடங்களில் அமர்த்த வேண்டும். மேலும் இடிதாங்கி அமைக்கப்பட வேண்டிய தேவை இருப்பின் அதனை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான விவரத்தை பள்ளிகள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலரிடம் தெரிவித்திட வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் சுற்றைக்கையில் தெரிவித்துள்ளார்.