தமிழக மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றே கடைசி நாள்!
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கினால், ஏற்கனவே மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் (ஜூன் 15) இந்த அவகாசம் முடிவுக்கு வருகிறது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கினால் சிறு, குறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மே 10 முதல் 31 வரையிலான மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்தியாவில் டெல்டா + வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் அறிக்கை!
அந்த வகையில் மே 31 ஆம் தேதியுடன் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதனை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதற்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 15) முடிவடைகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஆனால் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கு இன்று தான் இறுதி நாள் எனவும், இதற்கு மேல் மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி பெற தெரிவித்துள்ளார்.