இந்தியாவில் டெல்டா + வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் அறிக்கை!
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை டெல்டா என்னும் வகையில் உருவெடுத்து மக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் டெல்டா வகை வைரஸ் மேலும் உருமாறி டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
டெல்டா பிளஸ்:
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டில் டெல்டா என்னும் வகையில் உருமாறி பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்ததிற்கு டெல்டா வகை வைரஸ் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. பொதுவாக வைரஸ் என்றால் உருமாறும் ஆற்றல் பெற்றிருக்கும். அந்த வகையில் கொரோனா வைரஸ் அனைத்து உலக நாடுகளில் உருமாறி பல்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்திற்கு 6.16 லட்சம் தடுப்பூசிகள் வருகை – அரசு அறிவிப்பு!!
தற்போது அந்த வகையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையாக இருந்து வரும் டெல்டா வகை வைரஸ் தற்போது உருமாறியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. அதன்படி டெல்டா என்னும் வகை வைரஸ் மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய உருமாற்றம் சார்ஸ் – கொரோனா வைரஸ் 2ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா அவர்கள் கூறுகையில் டெல்டா பிளஸ் வகை தொற்று மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா பிளஸ் வகை வைரஸானது அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் எனவே இதுகுறித்து அச்சம் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.