தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 13 வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள், அலுவலகம் வருவதற்கான கால அவகாசத்தை ஜூன் 13 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பணியாளர்கள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த பொது முடக்க காலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகள் என அனைத்தும் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் பொதுமுடக்க காலத்தில், தலைமை செயலகம் உள்ளிட்ட சில அத்தியாவசிய பணிகளுக்காக செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வந்தன.
இந்தியாவில் 45 – 60 வயதினருக்கு 41.7 சதவீத தடுப்பூசி – மத்திய அரசு தகவல்!
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக, அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த மாற்றுத்திறனாளிகள் யாரும் பணிக்கு வர தேவையில்லை என அரசு அறிவித்தது. மேலும் கர்ப்பிணி பெண்களும் அலுவலகம் வரத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவினால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வருவதற்கான தடையானது ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது, சில தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் அடிப்படையில், அரசு அலுவலகங்கள் 30% ஊழியர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 7 முதல் அரசு அலுவலகங்கள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்கள் வருவதற்கான தடையை ஜூன் 13 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Dear Sir,
I want to sell my first car, very good condition TATA VISTA Car TN 47AA 4812.
I’m in Karur.
9443322892