இந்தியாவில் 45 – 60 வயதினருக்கு 41.7 சதவீத தடுப்பூசி – மத்திய அரசு தகவல்!

0
இந்தியாவில் 45 - 60 வயதினருக்கு 41.7 சதவீத தடுப்பூசி - மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 45 - 60 வயதினருக்கு 41.7 சதவீத தடுப்பூசி - மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 45 – 60 வயதினருக்கு 41.7 சதவீத தடுப்பூசி – மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 45-60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 41.7 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் பிறப்பு, இறப்பு பதிவின் காலதாமத கட்டணம் விலக்கு – முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இறுதியாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் நாடு முழுவதும் 45-60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 41.7 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவீதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!