1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அமைச்சர் வெளியீடு!

0
1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மத்திய அமைச்சர் வெளியீடு!
1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மத்திய அமைச்சர் வெளியீடு!
1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அமைச்சர் வெளியீடு!

இந்தியாவில் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ‘வாசியுங்கள் இந்தியா ‘ என்ற என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர் வாசித்தலே கற்றலின் அடித்தளம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்பு இயக்கம்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. தடுப்பூசிகள் மற்றும் அரசின் முயற்சியால் கொரோனா குறைந்து வந்ததை அடுத்து மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தன. இதனால் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தினசரி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? இன்று வெளியாகும் அறிவிப்பு!

இந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உண்டாகும் நோக்கில் ‘வாசியுங்கள் இந்தியா ‘ 100 நாள் வாசிப்பு இயக்கத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார். 2020ம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை வலியுறுத்துகிறது. இந்த 100 நாள் வாசிப்பு இயக்க தொடக்க விழாவில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் வாசித்தலே கற்றலின் அடித்தளம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி!

மேலும் விழாவில் தான் படிக்க தேர்ந்தெடுத்த 5 புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வாசிப்பு இயக்கம் ஜனவரி 1, 2022 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் படிப்பதை சுவாரஸ்யமாக மேற்கொள்ளும் வகையில், ஒரு குழுவுக்கு வாரம் ஒரு பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாசிப்பு இயக்கம் தாய்மொழி/உள்ளூர்/பிராந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தும் பிப்ரவரி 21ம் தேதி தாய்மொழி தினம் வாசிப்பு இயக்க பிரச்சாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளது. மேலும் ‘உங்கள் மொழியில் கதை வாசியுங்கள்’ என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!