காஞ்சிபுரம் IIITDM நிறுவனத்தில் ரூ.31,000 சம்பளத்தில் பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!
காஞ்சிபுரம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமானது (IIITDM) சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க 30.06.2022 கடைசி நாளாகும்.
IIITDM வேலைவாய்ப்பு விவரங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான IIITDM நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு என்று ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electronics and Communication Engineering பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரியும் மற்றும் Electrical Engineering / Electrical and Electronics Engineering / Electronics Engineering / Electronics and Communication Engineering / Instrumentation Engineering பாடப்பிரிவில் ME / M.Tech டிகிரியும் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு ஆக இருக்கும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.31,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 30.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (30.06.2022) நிறைவு பெறுகிறது. எனவே தகுதி வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை இன்றே செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.