இந்தியாவில் பரவும் ஓமைக்ரான் வைரஸ் – ICMR எச்சரிக்கை! 3வது அலை வருமா?
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் மோசமான கொரோனா 3 ஆம் அலையை நாம் சந்திக்க நேரிடலாம் அதனால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை விரைவில் செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கம்:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் பயன்பட்டாலும், அரசின் உரிய நடவடிக்கைகளாலும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலை நோக்கில் திரும்பி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TNPSC துறைத்தேர்வு எழுதும் அதிகாரிகள் கவனத்திற்கு – ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை!
அதனை தொடர்ந்து தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதுவரை 21 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வேகமாக பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது. அதனால் சுகாதார ஊழியர்கள், கொரோனா தடுப்பு ஊழியர்களுக்கு விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது வரை இந்தியாவில் 125 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாம் வேக்சின் பணிகளில் மட்டும் தீவிரம் காட்டினால் போதும், ஓமைக்ரான் தாக்கத்தை நம்மால் தடுக்க முடியும். அதனால் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். சுற்றுலா மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். ஓமைக்ரான் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் 12 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.