அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் – மாநில அரசு முடிவு!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஒப்புதல்
ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சில ஆங்கில வழிப் பள்ளிகளை நிறுவும் தொடக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 10,500 அரசு தொடக்கப் பள்ளிகளையும் ஆங்கில வழிக் கல்வியாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், வரவிருக்கும் கல்வி அமர்வில் இருந்து ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 1000 உரிமைத் தொகை பெறுவதில் சிக்கல் – வலுக்கும் கோரிக்கை!!
மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சில ஆங்கில வழிப் பள்ளிகளை நிறுவும் தொடக்கத் திட்டத்திற்கு மாறாக, தற்போது 10,500 அரசு தொடக்கப் பள்ளிகளையும் ஆங்கில வழிக் கல்வியாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதையும், தேர்தலுக்கு முந்தைய காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிக்கு இணங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசின் இந்த முயற்சி 1 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்புகளில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.