உங்களின் அவசர காலத்தில் PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
PF தொகை
EPFO அமைப்பு மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு PF தொகையாக சேமிக்கப்படுகிறது. அவசர காலங்களில் உங்களுக்கு பண தேவை இருந்தால் நீங்கள் PF கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு மேல் EPFO திட்டத்தில் முதலீடு செய்தால் நீங்கள் பணத்தை எடுக்கலாம்.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு.. நாளை (பிப்.15) சிறப்பு முகாம் – அரசு முக்கிய அறிவிப்பு!
மேலும் நீங்கள் இடம் அல்லது வீடு கட்ட பணத்தை எடுக்கலாம். இந்த தொகை வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும். அதில் 90% வரை நீங்கள் பணத்தை எடுக்கலாம். ஆனால் அதன் பின் 3 ஆண்டுகள் PF நிதியில் பங்களிக்க வேண்டும். மேலும் உங்களுடைய கணக்கில் 20000ரூபாய்க்கு குறைவாக காசு இருந்தால், நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. மருத்துவ சிகிச்சைக்காக பணத்தை எடுக்க விரும்பினால் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் அனுமதிக்கப்பட்ட பின் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். மேலும் நிறுவனம் மூடப்பட்டால் ஒரு மாதத்திற்கு பின் 75% பணத்தை எடுக்கலாம்.