மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் 9ம் தேதி வரை விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அசாம் அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு விடுமுறை:
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, அசாம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்! முதல்வருக்கு நன்றி!
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அசாம் மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இன்று முதல் 9 தேதி வரை விடுமுறை என்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விடுமுறையை ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறையானது அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதியன்று பொது போக்குவரத்திற்கு தடை – அரசு அறிவிப்பு!
மேலும் அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு அலுவலகத்திற்கு செல்லும் போது அவர்களது பிள்ளைகள், மனைவி மற்றும் பெற்றோர், மாமனார், மாமியார் ஆகியோரோடு நேரம் செலவு செய்துள்ளதை உறுதிபடுத்த புகைப்பட ஆதாரத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விடுமுறை பற்றி முதல்வர் கூறியதாவது, இந்த விடுமுறையானது பண்டைய இந்தியாவின் மதிப்புகளை நிலைநிறுத்த அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் அடுத்த வருடம் கீழ்நிலை ஊழியர்களுக்கு தங்களின் பெற்றோர்களை புனித யாத்திரைக்கோ, சுற்றுலா தளங்களுக்கோ அழைத்து செல்ல தகுந்த பண உதவிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.