தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்! முதல்வருக்கு நன்றி!
தமிழகத்தில் 2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக் குமாரை சந்தித்து அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள் நன்றி:
தமிழகத்தில் தற்போது பதவி ஏற்றுள்ள திமுக அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரி செய்யப்படும் எனவும் அறிவித்தது. இந்த வகையில் கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதியன்று பொது போக்குவரத்திற்கு தடை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்கள் தங்களது அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை அரசுக்கு வைத்தனர். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு அன்று, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜனவரி 16 வரை 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்க்காக செவ்வாய்கிழமை அன்று பேராவூரணி வட்ட அரசு ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர்கள், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் குமாரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுடன் அலுவலகத்தில் அரசு அலுவலகர் ஒன்றியத்தின் வட்டதலைவர் ராஜேந்திரன், செயலர் பெரியசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணையின் மாவட்ட செயலாளர் சுப.குழந்தைசாமி, அரசு அலுவலகர் ஒன்றியத்தின் மாவட்ட அமைப்பு செயலர் மனோகரதாஸ் , தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ரமேஷ், சங்கத்தின் வட்ட பொருளாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.