தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சுழற்சி முறையில் விடுமுறை – கோவை கமிஷனர் தகவல்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணிபுரிந்து வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிப்பதாக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.
சுழற்சி முறையில் விடுமுறை
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் அரசு விதித்த நோய் தடுப்பு விதிமுறைகளை பொது மக்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் பணியில் தமிழக போலீசார் ஈடுபட்டு வந்தனர். சொல்லப்போனால், தமிழகத்தில் தற்போது பரவி வந்த கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்ததற்கு தமிழக அரசின் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன், காவல்துறையின் பங்களிப்பும் முக்கியமானது.
பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கை விகிதம் உயர்வு – மத்திய அமைச்சர் தகவல் !!
இவ்வாறு பேரிடர் காலத்தில் அரசுக்கு துணையாக நிற்கும் காவல் அதிகாரிகளுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிப்பதாக கோவை மாவட்ட கமிஷனர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி தொடர்ந்து நான்கு நாட்கள் பணியில் இருக்கும் காவல்துறையினர், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து கோவை போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறுகையில், ‘கோவையில் உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மற்ற அரசு ஊழியர்களைப் போல, காவல்துறையினரும் வார இறுதி நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளும் வகையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறையால், கொரோனா தடுப்பு பணியில் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.